விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்பொழுது உலகம் ஒரு குக்கிராமமாக மாறிக்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளும், தொழில், வியாபாரச் செய்திகளும் உடனுக்கு உடன் உலகத்தில் தெளிவாகப் பிரசுரிக்கப்படுகின்றன. இதனால் இளைஞர்கள் அறிய வேண்டிய செய்திகளும், கருத்துக்களும் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. ஆனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் செய்திகள், கருத்துக்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
அதனால் பல அரிய செய்திகளையும், விஞ்ஞானக் கருத்துக்களையும் தெளிவாகப் பிற வாயில்களின் மூலம் அறிய வேண்டியுள்ளது. அவ்வாறு அறிந்தால்தான் நம் இளைஞர்கள் உலக மேடையில் சிறப்பாக முன்னேற முடியும். அதற்குத் துணையாக நிற்பனவற்றுள் நூல்கள் முன் நிற்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு திரு. தி.ரா. நமசிவாயம் அவர்கள் பல அரிய கருத்துக்களை எளிய முறையில் இனிய தமிழில் இந்நூலில் அளித்துள்ளார்கள்.