நம் வாழ்க்கைக்கு தேவையான, உபயோகமான அன்பு, பண்பு, பந்தம், பாசம், குடும்பம், கற்பு , நட்பு ,நன்றி இப்படிப்பட்ட பல
குணங்களை உணர்த்தும் உயரிய கதாபாத்திரங்கள் கண்ணன், கர்ணன், இராமன், இலக்குவன், அனுமன், குகன், கும்பகர்ணன், சீதை ஆகியோர்ஆவர். உலகில் ஒரு மகான் தோன்றி மறைகிறபொழுது, அவருக்குப் பின்னாலே, அவரைப்போலவே இன்னொருவர் வாரிசாக வந்து விடுவார். எனவே அந்த மகானின் இடம் நிரப்பப்பட்டுவிடும். ஆனால் ஆன்மீகச் செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் அமரராகி விட்ட பிறகு, அவரின் இடத்தை நிரப்ப இன்னமும் ஒருவர் தோன்றவில்லை. அந்த அளவுக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லா அளவுக்கு தன்னுடைய தள்ளாத வயதில்கூட தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றித்தூயவராக வாழ்ந்தவர்.
- மணவை பொன் மானிக்கம்.