பகட்டும் என்கிற அழகிய தமிழ்ச் சொல் இருக்கும்போது ஆடம்பரம் என்னும் அந்நியச் சொல்லே ஆடம்பரமானதுதான். தகுதிக்கு மீறி வாழ்வதையே பகட்டு என பகிர்கிறோம். சமூகம் எப்போதும் நம்மை உற்று கவனித்துக் கொண்டு தானிருக்கின்றது. யார் தீடீரென புதிய தோற்றத்துடன் புறப்பட்டாலும், அது தன் விமர்சனங்களை முன் வைக்கிறது.