திரை விலகியதும் அந்திவானம். நிலவு உதயமானாலும் தாமரை மூடிக்கொள்வது அல்லி உதயமானதும் மலர்வது. தொலைவில் கீதம் கேட்கிறது. ஒரு பெண் அவங்காரம் செய்துகொள்கிறாள். அவள் கணவன் ,மெல்ல ஓசைப்படாமல் வருகிறான். அவள் காணாத சமயமாகப் பார்த்து ,தலையில் சூடிக்கொள்ள வைத்திருந்த மல்லிகையை மறைத்துவிட்டு, ஏது மறியாதவன் போலிருந்து விடுகிறான். அவள் மல்லிகையைத் தேடுகிறாள். அவனுடைய குறும்புப் பார்வையிலிருந்து விஷயத்தைத் தெரிந்து கொள்கிறாள். ஏமாற்றுவதிலே,உங்களுக்கு ஈடு,யாரும் கிடையாது. நான் சொன்னப்படி வந்துவிட்டேனே, ஏமாற்றவில்லையே. இன்னும் எவ்வளவோ இருக்கிறது.ஆயுட்கால முழுவதும் நாம் இந்த ஓர் இரவை மறக்க முடியாது.