நற்பண்பு நல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பழமொழிகளாகவும் பொன்மொழிகளாகவும் விளங்குவதை நாம் அறிவோம். வள்ளுவரும் பெரியாரைத் துடைக்கோடல் ' என்ற அதிகாரத்தில் சான்றோர்களின் வாய்ச்சொற்கள் இழுக்கல் இடையுழி ஊற்றுக்கோல்ய போன்று உதவும் தன்மையன என்று குறிப்பிட்டுள்ளார். ச குமார் அவர்கள் பல நாட்டு அறிஞர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்கள், புலவர்கள், புரட்சாயாளர்கள், சமயப்பெரியோர்கள், அறிவியலறிஞர்கள் , போன்றோர் தம் சிந்தனையில் தோன்றிய கருத்துக்களைத் தொகுத்து சான்றோர் பொன்மொழிகள் என்ற அரிய நூலைப் படைத்துள்ளார்.
இந்நூலில் குறிப்பிடப்பட்ட சிந்தனை முத்துக்கள் வாசகர்கள் தம் மனமாகிய பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய செல்வமாகும்.இளைஞர்க்கும் மாணவர்க்கும் பேச்சாளர்களுக்கும் என்றும் பயன்படக்கூடிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன