இந்நூல் சிவத் தலங்களின் பெருமையினை இனிது சாற்றும் வகையில் 308 தலங்களின் சிறப்புகள் விளங்க அமைக்கப்பட்டுள்ளது. மூவர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்கள் இங்குக் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் வைப்புத் தலங்களும் சில குறிக்கப்பட்டுள்ளன. மேலும் வைப்புத் தலங்களும் சில குறிக்கப்பட்டுள்ளன. மூவர் பெருமக்கள் தாம் அருளிச் செய்த பதிகங்களில் பிற தருத்தலங்களைக் குறித்துப் பாடியன வைப்புத் தலங்களாகப் போற்றப்படுவன. மற்றும் அத்தகைய பாடல்பெறாத தலங்களுக்கும் மக்கள் சென்று சிறப்பு வழிபாடுகள் புரிதல் உண்டு. அவை அபிமானத் தலங்கள் என்று சாற்றப்படுவனவாகும். இத்தன்மையில், பாடல் பெற்ற தலங்கள், வைப்புத்தலங்கள், அபிமானத்தலங்கள் ஆகியன இந்நூலின் கண் விளங்குகின்றன.