இறைவன் இத்தகைய இருநிலையிலும் ஏற்று அருள்புரியும் கருணா மூர்த்தி. நிஷ்காமிய வழிபாடு எனப் புரிந்தாலும் இறைவன் அவரவர்களுக்கு வேண்டியவற்றை வரையாது அருளும் வள்ளல் ஆவார். இதனை மாணிக்கவாசகர். ''வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்று அருளிய திருவாசக மொழியால் காணலாம். இவ்வாறான பயன்தரும் மந்திரங்களும் 1045 தோத்திரப் பாடல்களுமாக இந்நூல் 233 தலைப்பில் அமைந்துள்ளது அன்பர்கள் இவற்றைத் தினசரி பத்தியுடன் ஓதி, நலமும் வளமும் பெறுவார்களாக.