காயத்திரி மந்திரம் என்றாலே விஸ்வாமித்திரர் இயற்றிய உலக மாதாவான ஐந்து
முகம் கொண்ட காயத்திரியின் மந்திரமே நினைவுக்கு வரும். ஆனால் அனைத்துத்
தேவதைகளுக்குமே தனித்தனியாக காயத்திரி மந்திரம் உண்டு. ஒரே தேவதைக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட காயத்திரி மந்திரங்களும் உள்ளன. காயத்திரி மந்திரங்கள்
மிகவும் சக்தி வாய்ந்தவை. அபரிமிதமான பலன்களைத் தரவல்லவை. ஒவ்வொரு தனி
மனிதனுக்கும் என இஷ்ட தேவதை உண்டு. அத்தேவதைக்குரிய காயத்திரி மந்திரத்தை
முறையாக உச்சரித்து வர நமது விருப்பங்கள் நிறைவேறும்.
இந்த உயர்ந்த காயத்திரி மந்திரங்களைப் பொருளுடன்
வாசகர்களுக்குத் தொகுத்தளிப்பதைப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த
நல்ல வாய்ப்பை எனக்களித்த அழகு பதிப்பகத்தாருக்கு என் நன்றி.