
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Free shipping over ₹500
இது பெண்ணியம் பேசப்படும் தலைமுறை. அந்த காலத்தில் புதுமைப் பெண்ணை
கனவு கண்டவன் பாரதி. பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து இயக்கம் கண்டவர்
பெரியார். புரட்சிகரமான சிந்தனைக்குச் சொந்தக்காரர் எனும் இனம் காட்டப்படாத
ஒரு தமிழ் தென்றலும் பெண்ணின் பெருமை பேசி இருக்கிறது. அந்த தமிழ்த்
தென்றல் திருவிக. அது தென்றல் தான். பாரதி போல் பெரியார் போல் புயல் அல்ல.
நமக்கு அடித்துச் சாய்க்க புயல் வேண்டும். இழுத்துப் பிடிக்க தென்றல்
வேண்டும்.
தமிழ் பற்று உள்ளவர்கள் பெரும்பாலும் திராவிட
இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட போது தேசிய இயக்கத்தால் இழுக்கப்பட்டவர் திரு.
வி.க. அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர். தொழிற்சங்கத்தின் பக்கம்
அழுத்தமாக திரும்பிய முதல் தமிழறிஞர். மாறாத காந்தியவாதி. பொது வாழ்வில்
தூய்மை இலக்கணமாகத் திகழ்ந்தவர். காந்தியமும் மார்க்சியமும் இணைந்த ஒரு
சமூகத்தை பார்க்க விரும்பியவர். அவர் இடதுசாரிகள் போல் பெரியார் போல்
பெண்ணியம் பேசாவிட்டாலும், மரபுவழிச் சிந்தனையில் வளர்ந்தாலும் அதிலிருந்து
மாறுபட்டு பெண்கள் நிலை பெண்ணுரிமை பற்றிப் பேசியவர். இதில் முக்கியமாக
கவனிக்க வேண்டியது பெண்ணின் பெருமையை எப்போது திரு. வி.க. பேசினார் என்பது
தான். ’பெண்ணின் பெருமை’ அல்லது ’வாழ்க்கைத்துணை’ என்ற அவருடைய நூல்
வெளிவந்த ஆண்டு 1927.