நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ண்ன் ;தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் என். எஸ். கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சிலநிமிஷங்களேனும் மறக்கும்படியாகச் செய்யும் பெரிய உபகாரியமான கிருஷணனை மதிக்காதவர்கள் , நாட்டின் நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. கலைவாணர் என்.எஸ். கே. என்று போற்றிப்புகழப்பட்டு வந்த என் .எஸ்.கிருஷணன் தனக்கு தானே சூட்டிக்கொண்டு பெருமிதம் கொண்டபட்டப்பெயர் -நாகரீகக் கோமாளி ' அதனையே இந்த நூலின் தலைப்பாகத் தந்திருக்கிறேன். கோமாளிதானாம் . ஆனால் 'நாகரீகக்கோமாளிய 'யாம். உண்மைதான் ! இன்றளவும் பிற எந்தச் சிரிப்பு நடிகர்களை விடவும் வேறுபட்டு நின்றவர்.நிற்பவர் கலைவாணர் ! படிப்பறிவு பெற வாய்ப்பில்லாது, நாடகக்குழுவில் நடிகனாக வாழ்வைத் தொடங்கிய கலைவாணர் ஆரம்பத்தில் சராசரியானதோர் 'ப்பூன்' நடிகராகத்தான் இருந்தார். ஆனால் பட்டறிவும் நல்லறிஞர் பலரது நட்பும் தோழமையும் கலைவாணரது பார்வையை விரிவுபடுத்தி அவரை நாகரீகக் கோமாளி' யாக உருக்கொடுத்தன.அவரது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் ஊடுருவி,ஆய்ந்து, முழுமையான கலைவாணரை தமிழுகத்திற்கு இந்த நூல் வடிவில் காணிக்கையாக்கியுள்ளேன். கலைவாணரின் மரணத்திற்குப்பின் ,அவர் குறித்த கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.
-பதிப்பகத்தார்.