பெண்களுக்கு எதிரான எந்தவொரு பாலின பாகுபாடும், பெண் சமத்துவத்திற்கு எதிரான தடைகள் ஆகும். பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. விசாகா மற்றும் சிலருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தொடர்ந்துள்ள வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பாலியல் கொடுமைகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை எதிர்ப்பதற்கான நடைமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றமும் அதற்கான கொள்கைகளை வகுத்துள்ளது.